சென்னை: சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் சங்கரன்கோவில் (தனி) தொகுதி உறுப்பினர் ஈ.ராஜா (திமுக) பேசுகையில்,”சங்கரன்கோவிலுக்கு பெருமை சேர்க்கும் கோமதி அம்மன் சங்கர நாராயணர் கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைகிறது. எனவே, தஞ்சாவூரில் நடத்தியது போன்று,இந்த கோயிலுக்கும் சதய விழா, கும்பாபிஷேகம் ஆகியவற்றை நடத்த வேண்டும்” என்றார். தொடர்ந்து அவர் அதிமுக ஆட்சியை குற்றம் சாட்டி பேசினார். அப்போது எழுந்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ”கன்னி பேச்சு பேசும்போது கவனமாக பேச வேண்டும். குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினால், சபாநாயகரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.இது புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சியாக இருக்கும்” என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.