×

காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.: தமிழக அரசு

சென்னை: காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம் -கூடுவாஞ்சேரி, பொன்னேரி, சோளிங்கர், திருநின்றவூர், இடங்கனசாலை, தாராமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு , முசிறி, லால்குடி ஆகிய பேரூராட்சிகள் அதன் வளர்ச்சியடைந்த ஊராட்சிகளை ஒன்றிணைந்து நகராட்சிகளாக மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kanchipuram ,Kumbakonam ,Karur ,Cuddalore ,Sivakasi ,Government of Tamil Nadu , Kanchipuram, Kumbakonam, Karur, Cuddalore and Sivakasi will be upgraded: Government of Tamil Nadu
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்