புதுச்சேரி: புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆளுநர் உரை தமிழில் இடம்பெறுவது மகிழ்ச்சி என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள புதுச்சேரி சுகாதாரத்துறை தயாராக உள்ளது எனவும் கூறினார்.