×

வீடுகளை உடைத்து 44 சவரன் கொள்ளை: காஞ்சிபுரம், கூடுவாஞ்சேரியில் துணிகரம்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு, வடிவேல் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுபா. தனியார் கம்பெனி ஊழியர்கள். கடந்த 2 நாட்களுக்கு முன் அசோக்குமார், திருவண்ணாமலையில் உள்ள உறவினர் நிகழ்ச்சிக்கு சென்றார். மதியம் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 20 சவரன் நகை, 15 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் கோவிந்தராஜபுரம், பகவதி நகர், 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (53). ஒப்பந்த நிறுவன மேலாளர். கடந்த 19ம் தேதி சங்கரநராயாணன், ஐதராபாத்தில் உள்ள உறவினரின் திருமணத்துக்கு மனைவி, 2 மகன்களுடன் சென்றார். நேற்று முன்தினம் காலை சங்கரநாராயணன், வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் பார்த்தனர். உடனடியாக அவருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சங்கரநாராயணன், வீடு திரும்பினார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 24 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாரின்படி கூடுவாஞ்சேரி எஸ்ஐ சதாசிவம் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்.

Tags : Kanchipuram ,Guduvancheri , Kanchipuram, robbery
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்