×

அதிவேகத்தோடு உழைத்தால் தமிழ்நாட்டில் விரைவில் பாஜக ஆட்சி அமையும்: மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தொடர்ந்து உழைத்தால், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்குத் தயாராவது குறித்து பாஜக மாவட்ட தலைவர்களுடனான ஆலோ சனை கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள அந்தக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடை பெற்றது. கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி பணிகள், அடுத்தக் கட்ட திட்டமிடல் குறித்தும் ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்ற கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினார். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல், வேல் யாத்திரை என தொடர்ச்சியாக ஓய்வின்றி கட்சி பணி செய்தது போல், வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அதே வேகத்தோடு உழைக்க வேண்டும் என மாவட்ட தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுவித்தார்.

Tags : Tamil Nadu , BJP will soon rule in Tamil Nadu if it works fast: Interview with state president Annamalai
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...