சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க வேறு அமர்வை அறிவித்தது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் அமர்வு வழக்கை விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் இருந்த நீதிபதி ஆதிகேசவலு விலகியதால் வேறு அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.