×

கோடநாடு விவகாரத்தில் முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஜெயக்குமார் உள்ளார்!: அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்..!!

சென்னை: கோடநாடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னுக்கு பின் முரணாக பேசுவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளரை சந்தித்து பேசிய தங்கம் தென்னரசு, கோடநாடு விவகாரத்தை சட்டப்பேரவைவில் விவாதிக்கக்கூடாது என கூறும் அதிமுக தான் முதலில் பேரவையில் அது பற்றி பேசியதாக குறிப்பிட்டார். ஆனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முரண்பாடுகளின் மொத்த உருவமாக இந்த விவகாரத்தை அணுகி வருவதாக அமைச்சர் விமர்சித்தார்.

கோடநாடு விவகாரத்தில் அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என விளக்கம் அளித்த தங்கம் தென்னரசு, சட்டப்படி விசாரணை நடக்கும் என்றும் கூறினார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறுவிசாரணை செய்யப்படவில்லை என்றும் மேலதிக விசாரணையை செய்யப்படுவதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார். அதிமுக தொண்டர்களே கோடநாடு விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என விரும்புவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

Tags : Jayakumar ,Kodanad ,Thangam , Kodanadu, Jayakumar, Minister Gold South
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி விசாரணை