சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட சாமியார் சிவசங்கர் பாபா வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சாமியார் சிவசங்கர் பாபா தான் ஆண்மையற்றவர் என்று கூறி ஜாமீன் கோரியது அம்பலமாகியுள்ளது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனையில் ஆண்மை இல்லை என்பது தெரிய வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜாமீன் மனுவில் தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ள சிவசங்கர் பாபா ஆண்மையில்லை என்று கூறியிருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.