×

பந்தலூர் அருகே வீடுகளை இடித்து சூறையாடிய காட்டு யானைகள்: கிராம மக்கள் அச்சம்

பந்தலூர்:  பந்தலூர் அருகே தேவாலா அட்டி பிலாமூலை பகுதியில் மூன்று வீடுகளை இடித்து சூறையாடிய காட்டு யானைகளால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா அட்டி பிலாமூலை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் புகுந்த காட்டு யானைகள் உணவு பொருட்களை தேடி கூலித்தொழிலாளி சுப்ரமணி, கதிர்வேல், ராமையா ஆகியோரது வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.இதனால் அச்சமடைந்தது வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். அதிர்ஷ்டவசமாக பாதிப்பு எதும் ஏற்படவில்லை.

அதன்பின், யானைகள் அங்கிருந்து நகர்ந்து சென்றன. தேவாலா சுற்றுவட்டார பகுதி குடியிருப்பில்  காட்டு யானைகள் புகுந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் வனத்துறையினர் யானைகளை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் வனத்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Pandharpur , Near Pandharpur Wild elephants looting houses: Villagers fear
× RELATED பந்தலூர் அருகே விவசாய நிலங்களை...