சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். கோடநாடு விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர மனு தரப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது. எதிர்க்கட்சி தலைவர் அறையில் எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்து வருகிறார். காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை கோடநாடு பற்றி விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மான மனு அளித்துள்ளார்.