×

கே.பி.பார்க் குடிசைமாற்று வாரிய கட்டிட விவகாரம் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை: அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

சென்னை: தரமற்ற முறையில் கே.பி.பார்க் குடிசைமாற்று வாரிய கட்டிடம் கட்டியதில் சம்மந்தப்பட்ட அனைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: சென்னை புளிந்தோப்பு கே.பி.பார்க்கில் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மிகவும் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, தொடர்புடைய கட்டுமான நிறுவனம் மற்றும் அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை அனைவரின் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிடத்தின் அஸ்திவாரமான பில்லர்கள் முதற்கொண்டு மேற்கூரை உள்ளிட்ட அனைத்தும் தரமற்ற முறையில், தொட்டாலே உதிரும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளது. இதற்கான செலவுகளை அந்த குடியிருப்பை கட்டிய கட்டுமான நிறுவனத்திடமிருந்து முழுமையாகப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : KP Park Housing Board ,STBI Party , Slum Board Building Issue, Strict Action, Government, STBI. Party
× RELATED முஸ்லிம்கள் குறித்து அவதூறாக பேசிய...