×

வில் வித்தை வீரர் மூக்கை துண்டித்த வாலிபர் கைது

அண்ணாநகர்: ஆழ்வார்ப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா (21). வில் வித்தை வீரரான இவர், ஐசிஎப் வடக்கு காலனியில் உள்ள தனியார் மையத்தில் பயிற்சி பெற்று வந்தார்.  கடந்த ஜூன் 26ம் தேதி பயிற்சி முடித்துவிட்டு, ஐசிஎப் வடக்கு தெரு வழியாக நடந்து சென்றபோது, அங்கு நின்றிருந்த ஒரு மர்ம நபர், ஆதித்யாவை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், அவரது மூக்கு துண்டானது. பல இடங்களில் கத்திகுத்து விழுந்தது. படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஐசிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர். அதில், கொரட்டூர் காந்தி ரோடு 70வது தெருவை சேர்ந்த புருஷோத்தமன் (25) என்பவர், ஆதித்யாவை கத்தியால் குத்தியது தெரிந்தது. தலைமறைவான அவரை தேடி வந்தனர். இந்நிலையில், மீஞ்சூரில் அவர் பதுங்கியிருப்பதாக ஐசிஎப் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த புருஷோத்தமனை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவரை ஐசிஎப் காவல் நிலையம் கொண்டு வந்து, வில்வித்தை வீரரை கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Archer , Archer beheaded, youth, arrested
× RELATED ஆர்ச்சரை விடுவித்தது மும்பை...