×

பகலில் எலக்ட்ரீஷியன் இரவில் வழிப்பறி: 2 பேர் கைது

பூந்தமல்லி: தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் கோவூர் அருகே நேற்று முன்தினம் இரவு, ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர், அவரை வழிமறித்து பணம், செல்போனை கேட்டு மிரட்டியுள்ளனர். தர மறுத்ததால் சரமாரியாக தாக்கி, அவரது பர்சை பறிக்க முயன்றனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அந்த இருவரை பிடிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட இருவரும் பைக்கில் அதிவேகமாக சென்ற இருவரும், போரூர் அருகே சாலை வளைவில் சறுக்கி விழுந்தனர். அவர்களை மடக்கி பிடித்து போரூர் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கெருகம்பாக்கம் லீலாவதி நகரை சேர்ந்த ஹேமந்த் (20), பிரகாஷ் (24) என்பதும், எலக்ட்ரீஷியன் வேலை செய்து வரும் இவர்கள், போதிய வருவாய் இல்லாததால், இரவில் தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து, வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்து பைக், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Tags : Electrician during the day Dredging at night: 2 arrested
× RELATED ஆவடி அடுத்த கோவில்பதாகையில் தனியார்...