×

உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனையில் சிறந்த கிளை மேலாளருக்கான விருது: தொடர்ந்து 4வது முறையாக வழங்கப்பட்டது

காஞ்சிபுரம் விழுப்புரம் கோட்டம், அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டலத்தில், 10 பணிமனைகளில், முறையான பஸ் பராமரிப்பு, டீசல் சிக்கனம், அதிக வருவாய் ஈட்டுதல் உள்பட பல காரணங்களுக்காக, ஒரு பணிமனையை தேர்வு செய்து, குடியரசு மற்றும் சுதந்திர தின விழாவில், சிறந்த கிளை மேலாளருக்கான விருது வழங்கப்படுகிறது. அதன்படி, சுதந்திர தின விழாவில், விழுப்புரம் கோட்டம், மேலாண் இயக்குனர் பொன்முடி, உத்திரமேரூர் பணிமனை கிளை மேலாளர் கருணாகரனுக்கு சிறந்த பணிமனை கிளை மேலாளருக்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

ஏற்கனவே உத்திரமேரூர் பணிமனைக்கு, கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்திலேயே, அதிகளவில் அரசு பஸ்களை இயக்கியதற்காக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த, 2019ம் ஆண்டு 365 நாட்களும் அனைத்து பஸ்களை இயக்கியதற்காக ‘பணித்திறன் நற்சான்றிதழ்’ வழங்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஆண்டு, கொரோனா ஊரடங்குக்குபின், எந்த பணிமனையிலும் இல்லாத வகையில், பஸ்களை இயக்கியதற்காக விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது, டீசல் சிக்கனம், பஸ் டயர்களின் ஆயுள் நீட்டிப்பு, கடந்த சட்டசபை தேர்தல் நாளில், பணிமனையில் உள்ள 100 சதவீதம் ஊழியர்களும் ஓட்டுபோட்டது ஆகியவற்றுக்காக 4வது முறையாக உத்திரமேரூர் பணிமனைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

Tags : Uttiramerur Transport , Transport Workshop, Best Branch Manager, Award
× RELATED 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்:...