×

குரோம்பேட்டை போக்குவரத்துக் கழக தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: வரும் 30ம் தேதி கடைசி நாள்

சென்னை: குரோம்பேட்டை போக்குவரத்துக் கழக தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற மாணவர்கள் விண்ணப்பிக்காலம். வரும் 30ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்படும் என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மாநகர் போக்குவரத்துக் கழக தொழில் நுட்பப் பயிலகக் கல்லூரி மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் வெளியிட்ட அறிக்கை: மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மத்திய அரசின் அங்கிகாரம் பெற்ற எம்.எம்.வி நிறுவனம் குரோம்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில், 1,252 மாணவர்கள், அனுபவம் வாய்ந்த பயிற்சி வல்லுநர்கள் மூலம் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள்.

2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு பணியாளர்களின் வாரிசுகள் போக எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 72 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. கால அளவு இரண்டு ஆண்டுகள். விண்ணப்ப படிவங்களைப் பெறுவதற்கு, முதல்வர், மாநகர் போக்குவரத்துக் கழகத் தொழிற் பயிற்சி நிலையம், மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி நிலைய வளாகம், காந்தி நகர், குரோம்பேட்டை, சென்னை-600 044 முகவரியில் அணுகவும். மேலும், www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.


Tags : Crompton ,Transportation Vocational Training Center , Crompton, Transport Corporation Vocational Training Station, Student Admission
× RELATED குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரி விடுதி ...