×

நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் பணியிட மாற்றம் செய்து அரசு செயலாளர் மணிவாசன்  உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்: நீர்வளத் துறை தலைமை சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் ரவிந்திரபாபு  பொதுப்பணித்துறை சிறப்பு செயலாளராகவும், பொதுப்பணித்துறை சிறப்பு செயலாளராக இருந்த அசோகன் சென்னை மண்டல நீர்வள  பிரிவு தலைமை பொறியாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தலைமை பொறியாளர் அசோகன் தென்பெண்ணை ஆற்றில்  தடுப்பணை உடைந்த விவகாரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணை நிலுவையில் இருந்ததால் அவர் சிறப்பு செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு  நியமிக்கப்பட்டார். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் மீது குற்றச்சாட்டு நிரூபணம் ஆகவில்லை. இதனால் அவர் தற்போது  சென்னை மண்டல நீர்வள பிரிவு தலைமை பொறியாளராக பணியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Water Resources Department ,Tamil Nadu Govt. ,CHENNAI ,Government ,Manivasan ,Engineer ,Chennai Zonal Water Resources Department ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...