×

புளியந்தோப்பில் தரமற்ற கட்டுமானம் ஓ.பி.எஸ்சை விசாரிக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை: புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் தரமற்ற கட்டுமான பிரச்னை தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நமது மாநிலம் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறது. ஆனால் தரமற்ற கட்டுமான பணிகளால், உச்சபட்ச ஊழலால் ஏழை மக்களின் நம்பிக்கை நொறுங்கிவிட்டது. உயிராவது மிச்சமாகுமா என்ன அச்சமும் ஏற்பட்டுள்ளது.

புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுமானங்கள் பற்றிய ஆதாரங்கள் அதிர்ச்சி அடைய வைக்கிறது. கடந்த ஆட்சியில் இந்த துறையின் அமைச்சர் என்கிற முறையில் ஓ.பன்னீர் செல்வத்தின் நேரடி கண்காணிப்பில் கட்டப்பட்டுள்ளது. அமைச்சரின் கண்ணசைவு இல்லாமல் இதுபோன்ற மாபெரும் முறைகேடுகள் நடப்பதற்கு சாத்தியமே இல்லை. முன்னாள் அமைச்சர் வேலுமணியோடு தொடர்புடையவர்கள் விசாரிக்கப்பட்டது போன்று ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஒப்பந்த நிறுவனங்கள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். ஊழலின் முக்கோணங்களான அமைச்சர், அதிகாரி, ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : SC , Non-standard construction, OPS, People's Justice Center request, investigation
× RELATED பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த...