×

தி.மு.க.வில் விரைவில் இணைய உள்ளேன்: அதிமுக முன்னாள் எம்.பி பரசுராமன் பேட்டி

தஞ்சை: சிறப்பாக ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வில் விரைவில் இணைய உள்ளதாக அதிமுக முன்னாள் எம்.பி., பரசுராமன் தெரிவித்தார். தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி.பரசுராமன் தி.மு.க.வில் இணைய உள்ளதாக கடந்த சில மாதங்களாக தஞ்சை மாவட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. அவரும், அவரது ஆதரவாளர்களும் அதிமுகவிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிமுக முன்னாள் எம்.பி.பரசுராமன் அளித்த பேட்டி:

தஞ்சை அருகே நீலகிரி ஊராட்சி மன்ற தலைவராக 3 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றேன். அதைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கினார். நான் வெற்றி பெற்று எம்.பி.யானேன். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்துக்கும், எனக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருப்பதாக கூறுவது தவறு.

அப்படி எதுவும் இல்லை. தற்போது சிறப்பாக ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வில் விரைவில் இணைய உள்ளேன். கடந்த சட்டசபை தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட சீட் கேட்டது உண்மைதான். சீட் கிடைக்காததால் விலகவில்லை. எந்த பதவியையும் எதிர்பார்த்து தி.மு.க.வுக்கு செல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : DMK ,AIADMK ,Parasuraman , DMK, AIADMK, former MP Parasuraman
× RELATED புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு...