சென்னை: சிவசங்கர் பாபா பாலியல் வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி டி.எஸ்.பி. குணவர்மன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் விஜிலென்ஸ் அதிகாரியாக குணவர்மன் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவசங்கர் பாபா மீதான 2வது போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார்.