சென்னை: சுதந்திரமான கட்டிட தரம் பரிசோதிக்கும் நிறுவனத்தை உருவாக்க முதலமைச்சருக்கு அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு முறைகேட்டில் தேவைப்படும் நடவடிக்கை பற்றி முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. எ,அமைச்சர் தா.மோ.அன்பரசன், முதன்மை செயலர் ஹிதேஷ் குமார் மக்வானா ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் கோரிக்கை மனு அளித்துள்ளது. கட்டிட முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உடனே எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.