சென்னை: சென்னை பெருங்குடி ஏரி மற்றும் சுற்றுப்புறத்தில் குப்பை கொட்டிய 21 பேருக்கு ரூ.12,000 அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகள், நீர்வழித்தடங்களில் குப்பை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழித் கால்வாய்கள், மழைநீர் வடிகால் துறையால் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.