சென்னை: தமிழ்நாடு அரசின் தற்காலிக பணியாளருக்கான மகப்பேறு விடுப்பு குறித்த அரசாணையை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகப்பேறு விடுப்பில் பணிவரன்முறை செய்யப்பட்ட, வரன்முறை செயல்படாத ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான விடுப்பு வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.