×

அதிமுக-வினரை புலனாய்வுத் துறையில் வேண்டும் எனில் சேர்த்துக் கொள்ளலாம்!: ப.சிதம்பரம் விமர்சனம்

ராமநாதபுரம்: அதிமுகவினரை புலனாய்வுத் துறையில் வேண்டும் எனில் சேர்த்துக் கொள்ளலாம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். பரமக்குடியில் காங்கிரஸ் நிர்வாகி இல்ல திருமணத்தில் பங்கேற்ற பின் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் கல்வி, மருத்துவம், சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கணினி வழியாக கல்வி கற்க முடியாத ஏழை, நடுத்தர மக்களுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.


Tags : P. Chidambaram , AIADMK, Department of Intelligence, P. Chidambaram
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...