×

வேலூர் அருகே விசாரணை கைதி தப்பியோடிய விவகாரத்தில் எஸ்.எஸ்.ஐ. உள்பட 3 போலீசார் பணியிடைநீக்கம்..!!

வேலூர்: வேலூர் அருகே விசாரணை கைதி தப்பியோடிய விவகாரத்தில் எஸ்.எஸ்.ஐ. உள்பட 3 போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சங்கரன், காவலர்கள் பாலாஜி, ஜலாலுதீன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். குடியாத்தம் அடுத்த மேல்பட்டி - மேல்கொத்த குப்பத்தை சேர்ந்த மோகன், ராஜேந்திரன் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மோகனின் மகன் சிவராமன், மருமகள் விஷ்ணுபிரியா இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். சிவரணம் தம்பதியை ராஜேந்திரன் மகன் சத்யராஜ் வழிமறித்து கத்தியால் வெட்டினான்.


Tags : SSI ,Vellore , Vellore, interrogation prisoner, police, dismissal
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...