×

சிவசங்கர் பாபா வழக்கில் 10 நாளில் குற்றப்பத்திரிக்கை: சிபிசிஐடி

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 10 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே முதல் போக்சோ வழக்கில் கடந்த 13-ம் தேதி 300 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. 3-வது மற்றும் 3-வது போக்சோ வழக்கில் 10 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். 2 போக்சோ வழக்குகளிலும் குற்றப்பத்திரிக்கையை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.


Tags : Shiva Sankar ,Papa , Chargesheet in Sivashankar Baba case in 10 days: CPCIT
× RELATED சிறுகதை