×

வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளை கட்டுப்படுத்த மூக்கணாங்கயிறு போடும் சட்டப்பிரிவை எதிர்த்து வழக்கு: ஒன்றிய,தமிழக அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து சென்னை அயனாவரத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்தமனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கு சதையில் ஓட்டையிட்டு மூக்கணாங்கயிறு போடுவதால் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன. இது மிருகவதையாகும். எனவே, மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் வகையில் உள்ள மிருகவதை தடைச் சட்டப் பிரிவை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள், உலக அளவில் மாடுகளை கட்டுப்படுத்த இந்த நடை முறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக புதிய விதிகளை வகுத்து உலகத்தை பின்பற்ற செய்வோம்.  இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசும், தமிழக அரசும் 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 8 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Tags : Union ,Tamil Nadu Governments , Cow, Nose, Legal, Case, high court
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...