சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக வருவாய் துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் நேற்று கூறியதாவது: கடந்த 10 வருட அதிமுக ஆட்சி காலத்தில், அதிகளவில் பட்டா வழங்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் சொன்ன கணக்குக்கும், அரசிடம் உள்ள கணக்குக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
இந்த பணிகளை ஒழுங்கு செய்து வருகிறோம். பட்டா கொடுத்தாலும், அந்த இடத்தை அளந்து கொடுக்கும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இது சம்பந்தமாக, தமிழகம் முழுவதும் விசாரணை நடத்தி ஒரு வருட காலத்தில் அனைத்து பட்டாக்களும் முறைப்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு இடத்தை அளந்து கொடுக்கும் பணிகள் நடைபெறும் என்றார்.