சிவகாசி: சிவகாசி அருகே அரவை ஆலையில் பதுக்கி இருந்த 33 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருமங்கலத்தைச் சேர்ந்த மாதவன் பூலாவூரணி ரத்தினம் நகர் புது காலனியில் அரவை ஆலையை நடத்தி வந்துள்ளார். ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பாலிஷ் செய்து அரிசிக் கடைகளுக்கு விநியோகித்தது அம்பலமாகியுள்ளது.