×

பொன்னமராவதி அருகே பூ பூக்காமல் தார் போட்ட அதிசய வாழை மரம்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டியில் ஒரு வீட்டில் வளர்த்து வரும் வாழை மரத்தின் இடையே குறுக்கே பூ பூக்காமல் அதிசயமாக வாழை தார் போட்டுள்ளது அதே போல காய் காய்த்து வெட்டப்பட்ட வாழை மரம் தழைத்து மீண்டும் பூவோடு காய் காய்த்து தார் போட்டுள்ளது. நுனியில் தார் விடாமல் இடையே குறுக்கு தார் குலை தள்ளியுள்ளது. பொதுவாக வாழை மரம் நுனியில் பூ பூத்து தார் விடுவது வழக்கம்.

ஆனால் இந்த வாழை மரத்தின் நடுப்பகுதியில் மரத்தை பிளந்து கொண்டு பூ விடாமல் தார் போட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதே போன்று காய் காய்த்து வெட்டப்பட்ட வாழை மரத்தில் மீண்டும் பூ பூத்து காய்க்க தொடங்கியுள்ளது. இந்த அதிசய நிழ்வை வியப்புடன் அப்பகுதி பொதுமக்கள் பார்த்து பரபரப்பாக பேசி வருகின்றனர்.

Tags : Ponnamaravathi , Amazing banana tree near Ponnamaravathi without flowers
× RELATED பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் கோலாட்டம் அடித்து வழிபாடு