×

அவன் - இவன் திரைப்படத்தில் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை பற்றி அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் பாலா விடுவிப்பு

சென்னை : அவன் - இவன் திரைப்படத்தில் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை பற்றி அவதூறு பரப்பியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் இருந்து இயக்குனர் பாலா விடுவிக்கப்பட்டார். கடந்த 2011ம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில், கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் திரைப்படம் அவன் - இவன். இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும் இயக்குனர் பாலா அவதூறாக சித்தரித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி இந்த படத்தின் மீது 2011ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் வழக்கு தொடர்ந்து இருந்தார்.  

இயக்குனர் பாலா தரப்பில் வழக்கறிஞர் முகமது உசேன் ஆஜராகி திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும் சொரிமுத்தையனார் குறித்தும் எந்த தவறான கருத்துக்களும் பதிவு செய்யப்படவில்லை என பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், மனுதாரர் குற்றச்சாட்டு முறையாக நிரூபணம் ஆகவில்லை என்று கூறி இயக்குனர் பாலாவை விடுவித்து உத்தரவிட்டார்.சில ஆண்டுக்குகளுக்கு முன்பு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்யாவும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.பொய் வழக்கில் இருந்து விடுவிப்பு, மகிழ்ச்சி என இயக்குனர் பாலா தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிங்கம்பட்டி ஜமீன் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் நீதிமன்ற ஆவணங்களை பெற்று கலந்தாலோசனை செய்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

Tags : Bala , இயக்குனர் பாலா
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை