சென்னை: புளியந்தோப்பு பன்னடுக்குகட்டடம் தரமற்று கட்டப்பட்டது பற்றி அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். அப்போதைய துறை அமைச்சர் மீது விசாரணை நடத்த வேண்டும், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டதாலேயே கட்டடத்தின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.