×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு!: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் எதிர்க்கட்சி தலைவர் ஓபிஎஸ், துணைத் தலைவர் ஈபிஎஸ் சந்திப்பு..!!

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் சந்தித்து வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆளுநருடன் இந்த சந்திப்பானது நிகழ்ந்து வருகிறது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தற்போது அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. விசாரணைகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே செய்தியாளர்களிடையே பேசிய கொலை குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இதே தகவல்களை உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது. நேற்று சட்டப்பேரவையில் கோடநாடு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இத்தகைய சூழலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் சந்தித்து வருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை ஓபிஎஸ் - ஈபிஎஸ் சந்தித்து பேசி வருகின்றனர். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மனோஜ்பாண்டியன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.


Tags : Kodanad ,OBS ,vice president ,EPS ,Governor ,Banwarilal Purohit , Purohit by Governor Banwar, OBS, EPS
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கோவையில் 4...