சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் சந்தித்து வருகின்றனர். கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து பேரவையை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில் ஆளுநருடன் சந்திப்பு நிகழ்ந்து வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை ஓபிஎஸ் - ஈபிஎஸ் சந்தித்து பேசி வருகின்றனர்.