×

திமுகவினர் கேட்ட கேள்விகளுக்கு அதிமுக அமைச்சர்கள் மணிக்கணக்கில் பதில்: துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை

சென்னை: சட்டப்பேரவையில் நிதித்துறை மற்றும் வேளாண்மைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பேசியதாவது: அவை முன்னவர் துரைமுருகன், ஆளும் கட்சியிடம் இருந்து சுருக்கமாக பதில் வரும் என்று கூறினார். ஆனால், நிதி அமைச்சர் மட்டும் 20 நிமிடம்  பேசுவதற்கு எடுத்து கொண்டுள்ளார். சுருக்கமாக பதிலை சொன்னால் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு பேசுவதற்கு நேரம் கூடுதலாக கிடைக்கும். அமைச்சர் துரைமுருகன்: விடை சுருக்கமாக சொல்வது அமைச்சரிடம் உள்ளது. அவர் எந்த சப்ஜெக்ட் பேசுகிறார் என்று இருக்கிறது. நீண்ட நேரம் பேசலாமா என்று கேட்கிறீர்கள்.

ஆனால், இதை நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது கேட்டிருப்போம். மணிக்கணக்கில் பதில் அளித்தீர்கள். ஒரு சின்ன கேள்விக்கு கேட்டதற்கு, நாங்கள் போய் டீ குடித்து வரும் போது கூட பேசிக்கொண்டே இருப்பீர்கள். இன்னுமா இவர்கள் விடவில்லை என்று நாங்கள் கேட்டிருக்கிறோம் என்று கூறியவுடன் சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் அனைவரும் சிரித்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி: எங்கள் அமைச்சர்கள் சுருக்கமாக பேசுவார்கள். நீங்கள் விரிவாக கேட்கலாம்.

அமைச்சர் நீண்ட நேரம் பேசலாம். ஆனால், அவருக்கு பதிலுரை தர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், எங்களது நேரத்தை அவர் எடுத்து விட்டால் எப்படி பேச முடியும். அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்: எதிர்க்கட்சி தலைவர் சொன்ன கருத்தை நான் வரவேற்கிறேன். பொருளாதாரத்தில் ஆழ்ந்த தகவலை தான் நான் கூறினேன்.

Tags : AIADMK ,DMK ,Duraimurugan , DMK, AIADMK Minister, Thuraimurugan,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...