ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீதாராம்நகர் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இடப்பற்றாக்குறை மற்றும் பல்வேறு இடையூறுகள் காரணமாக புதிய கட்டிடத்திற்கு இந்த அரசுப்பள்ளி மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த பழைய பள்ளி கட்டிடத்தில் பள்ளியின் பொருட்களை பாதுகாத்து வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை திடீரென அங்கு வந்த சிலர் பள்ளியின் கட்டிடத்தை பொக்லைன் மூலம் இடித்தனர். தகவலறிந்து ஓசூர் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். பொக்லைன் ஆபரேட்டரிடம் விசாரித்தபோது, இருவர் வாடகை கொடுத்து இந்த கட்டிடத்தை இடிக்கக் கூறியதாக தெரிவித்தார். அங்கு கட்டிடத்தை இடிக்க கூறிய நபர்கள் இல்லாததால், இதுகுறித்து ஓசூர் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.