×

ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்வேன்.. பிரதமர் மோடியிடம் தமிழக வீரர் மாரியப்பன் உறுதி!!

டெல்லி : டோக்கியோவில் நடைபெற உள்ள பார ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது தமிழக வீரர் மாரியப்பன் மற்றும் அவரது தாயார், தம்பிகள் குமார், கோபி உள்ளிட்ட குடும்பத்தினரும் பிரதமர் மோடியுடன் பேசினர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து, பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. வரும் 24ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 5ம் தேதி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.இந்த போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்து பங்கேற்கும் 54 வீரர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன், பிரதமர் மோடியிடம் இந்தியில் பேசினார்.இதையடுத்து பிரதமர் மோடி இந்தியில் கேட்ட கேள்விக்கு மாரியப்பனின் தாயார் தமிழில் பதில் அளித்தார். அப்போது மாரியப்பனுக்கு தாம் அளித்த உணவு வகைகள் குறித்து தாயார் சரோஜா விளக்கினார்.கடந்த ஆண்டே போலவே மாரியப்பன் தங்கம் வாங்க வேண்டும் என்று விரும்புவதாக அவர் கூறினார்.

மேலும் பிரதமர் மோடியிடம் மாரியப்பன் பேசியதாவது, கடந்த 2016ம் ஆண்டு மிகச் சிறப்பான மற்றும் கடினமான பயிற்சி மற்றும் பயிற்சியாளரின் ஒத்துழைப்பு காரணமாக தங்கப்பதக்கம் வென்றேன். இந்த முறை இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.தங்கப்பதக்கம் பெற்று மீண்டும் சாதனை படைப்பேன்,என்றார். இதை கேட்ட பிரதமர், மாரியப்பன் நாட்டிற்கு நல்லபெயர் எடுத்துத் தரவேண்டும் என்றார்.தொடர்ந்து தாயார் சரோஜாவிடம் பேசிய மோடி,பிள்ளையை பெற்றெடுத்துள்ளீர்கள், மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியதுடன், மாரியப்பன் என்ன விரும்பி சாப்பிடுவார் என்று கேட்டார். இதற்கு நாட்டுக்கோழி மற்றும் சூப் விரும்பி சாப்பிடுவார் என்று மாரியப்பனின் தாயார் சரோஜா பதிலளித்தார்.2016ம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Olympics ,Modi ,TN ,Mariappan , பிரதமர் மோடி
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...