பெங்களூரு: கர்நாடகா மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது: `` வைரஸ் தொற்றின் காரணமாக மக்கள் இறக்கவில்லை. இது பாஜ அரசு நிகழ்த்திய படுகொலை. விவசாய விரோத சட்டங்கள், பெட்ரோல்,டீசல் விலை உயர்வு பிரச்னைகளை மக்களிடம் தெரிவிக்கவேண்டும். நாட்டின் கடனை அடைப்பதற்காகவே பெட்ரோல், டீசல் வரி உயர்த்தப்பட்டதாக மோடி கூறுவது பொய்யாகும். காங்கிரஸ் ஆட்சியின் போது குடும்ப செலவிற்கு ரூ.5 ஆயிரம் இருந்தால் போதுமானது.அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதித்துள்ளனர். பாஜவின் திட்டமிட்ட பொய்களை உண்மை தீபத்தால் அழிக்க வேண்டும். நமது நாட்டை மோடி, அமித்ஷா என்ற ராகு-கேது ஆக்கிரமிப்பு செய்வதை மக்கள் தடுக்கவேண்டும்’’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.