×

சுற்றுலா பயணிகளுக்கு தடையால் ஆழியார் பூங்கா வெறிச்சோடியது

பொள்ளாச்சி:  கொரோனா பரவல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  ஆழியார் அணைப்பகுதிக்கு , கடந்த மாதம் துவக்கத்திலிருந்து கட்டுப்பாட்டுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தென் மேற்கு பருவமழை காரணமாக, ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவானது. பின், இந்த மாதம் துவக்கத்திலிருந்து மழை குறைவால், ஒரு வாரத்துக்கு மேலாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

ஆனால் நேற்று ஒருநாள், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஆழியார் அணைப்பகுதி மற்றும் பூங்கா பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, தடை விதிக்கப்பட்டது. இதனால் நேற்று, சுதந்திர தின விடுமுறையையொட்டி பொழுதை கழிக்கலாம் என உள்ளூர் மற்றும்  வெளியூர்களிலிருந்து ஆழியார் பூங்காவிற்கு வந்த வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அணைப்பகுதி மற்றும் பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடையால், அப்பகுதி அட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.

Tags : Azhiyar Park , Barrier to tourists Azhiyar Park was deserted
× RELATED ஆழியார் பூங்கா மீண்டும் திறப்பு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி