சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட, சட்டசபையில் சிறப்பு தீர்மானம் உடனடியாக இயற்றப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிப்படி ஆலையை நிரந்தரமாக அகற்றும் தீர்மானத்தை உடனடியாக கையில் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.