×

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்ய சிபிஐ தீவிர நடவடிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 2 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் சிபிஐ இறங்கியுள்ளது. பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பலரை கடத்தி பாலியல் பாலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக, 2019 பிப்ரவரி மாதம், அந்த கும்பலிடம் சிக்கிய ஒரு கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன் வசந்தகுமார், சதீஸ், மணிவண்ணன் ஆகியோர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பின், சிபிஐக்கு மாற்றப்பட்டு, அப்போதைய பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் (32), ஹெரன்பால் (27), பாபு (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு, கோவை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது. இந்த வழக்கில் பொள்ளாச்சி அருகே கிட்ட சூராம்பாளையத்தை சேர்ந்த அருண்குமார் (29) என்பவரை சிபிஐ போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதையடுத்து பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்த நிலையில், சிபிஐ விசாரணையில் மேலும் இருவர் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும், அந்த முக்கிய பிரமுகர்கள் யார்? என்பது விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.

Tags : CBI ,Pollachi , CBI to arrest 2 more in Pollachi sex case
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...