காரிமங்கலம் : தமிழக பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரித்து, ஊதிய உயர்வு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து, பெரியாம்பட்டி முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர் தலைமையில், தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஊராட்சி செயலாளர் முருகன், வார்டு உறுப்பினர்கள் காளியப்பன், ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.