×

கடலூரில் பலா சிறப்பு மையம்,பண்ருட்டி, ஒட்டன் சத்திரத்தில் குளிர்பதன கிடங்குகள், கொல்லிமலையில் மிளகு பதப்படுத்தும் மையம் : வேளாண் பட்ஜெட் 2021

சென்னை : தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022ம் ஆண்டுக்கான 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்டது போன்று வேளாண் பட்ஜெட்டும், மின் வேளாண் (இ-வேளாண்) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

 தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :

*விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.4508.23 கோடி மின்வாரியத்திற்கு ஒதுக்கீடு

*வேளாண் பணிகளை எளிதாக்க 50 ஆயிரம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்க ரூ.15 கோடி

*வேளாண்மையில் சிறப்பாக பணியாற்றும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டம் - ரூ.6 லட்சம் ஒதுக்கீடு

*பயிர் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2327 கோடி ஒதுக்கீடு

*கரும்பு உற்பத்திக்கான ஊக்கத் தொகையாக சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.42.50 வழங்கப்படும்

*கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 வீதம் வழங்கப்படும்

*கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகை நேரடியாக கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்குக்கு வழங்கப்படும்

*ஊக்கத் தொகையால் விவசாயிகள் ஒரு டன் கரும்புக்கு ரூ.2900 வீதம் பெறுவார்கள்

*சுமார் 1 லட்சம் கரும்பு விவசாயிகள் பலன் பெற ரூ.138.33 கோடி ஒதுக்கீடு

*விவசாயிகள் புதிய வகை கரும்பு வகைகளை சாகுபடி செய்ய ஊக்குவிக்க ரூ.2கோடி

*பழப்பயிர் சாகுபடி பரப்பை 3.30 லட்சம் ஹெக்டேராக உயர்த்த 80 லட்சம் பல்வகை பழச்செடிகள் திட்டம்

*ரூ.29.12 கோடி செலவில் மத்திய, மாநில அரசுகள் நிதி உதவியுடன் பல்வகை பழச்செடிகள் திட்டம் செயல்படுத்தப்படும்

*முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டம் எனும் புதிய திட்டம் அறிமுகம். பொதுமக்கள் சத்தான காய்கறிகளை தங்கள் வீடுகளிலேயே விளைவிக்க முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி திட்டம்

*முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டம் - கிராமப்பகுதிகளில் 2 லட்சம் விதைத் தளைகள் மானியத்தில் விநியோகம்

*முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டம் - நகர்பகுதிகளில் 1 லட்சம் மாடித் தோட்டத் தளைகள் மானியத்தில் விநியோகம்

*காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக எக்டேருக்கு ரூ.15ஆயிரம் அல்லது இடுபொருட்கள் வழங்கப்படும்

*முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டம் - ரூ.95 கோடி நிதி

*2 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவ குணம் கொண்ட 16 லட்சம் மூலிகைச்செடிகள் வழங்கும் திட்டம் - ரூ.2.18 கோடி நிதி

*தோட்டக்கலை முதன்மை மாவட்டங்கள் திட்டத்திற்கு ரூ.12.50 கோடி நிதி

*கடலூர் மாவட்டத்தில் பலாவிற்கான சிறப்பு மையம் - ரூ.5 கோடி நிதி

*982.48 கோடி ரூபாய் செலவில் 1.50 லட்சம் ஹெக்டர் பரப்பில் சிக்கன நீர்பாசன திட்டம்

*ரூ.1 கோடி செலவில் வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்

*விவசாயிகளுக்கு 7106 வேளாண் எந்திரங்கள் வழங்க மற்றும் 193 வேளாண் எந்திரங்கள் வாடகை மையம் அமைக்க ரூ.140 கோடி

*விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்க வேளாண் இயந்திரங்கள் ரூ.23 கோடியில் கொள்முதல் செய்யப்படும்

*முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டம் - ரூ.114.68 கோடி ஒதுக்கப்படும்

*மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் திட்டம் - விவசாயிகளுக்கு ரூ.10ஆயிரம் மானியம்

*உழவர் சந்தைகளை புனரமைத்து நவீனப்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு

*உழவர் சந்தைகளில் ரூ.2.75 கோடி செலவில் திடக்கழிவு மேலாண்மை செய்து காய்கறி கழிவு உரம் தயாரிக்கப்படும்   

*நடப்பாண்டில் ரூ.6 கோடி செலவில் 10 உழவர் சந்தைகள் புதியதாக அமைக்கப்படும்

*வேளாண் விற்பனை ஒழுங்குமுறை கூடத்தில் 40 விளை பொருட்களுக்கு ஒரே சீராக உறுதி அறிவிக்கை வெளியிடப்படும்

*ரூ.10 கோடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு அருகே சேமிப்பு வசதியுடன் விற்பனை நிலையம் அமைக்கப்படும்

*ஒட்டன்சத்திரம், பண்ருட்டியில் ரூ.10 கோடியில் காய்கறிகள், பழங்களுக்கான குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்

*30 நடமாடும் காய்கனி அங்காடிகள் வாங்க கிராமப்புற இளைஞர்களுக்கு ரூ.2லட்சம் வரை மானியம்

*நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் ரூ.50 லட்சம் செலவில் மிளகிற்கான பதப்படுத்தும் மையம்

*நீலகிரியில் ரூ.2 கோடி செலவில் ஒருங்கிணைந்த வேளாண் சந்தை வளாகம்

*முருங்கை விவசாயிகளுக்கு என்று சிறப்பு ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படும்

*கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.  

 *தோட்டக்கலை பயிர்கள் அதிகம் விளையும் மாவட்டங்களில் தோட்டக்கலை கிடங்குகள் அமைக்கப்படும். தென்காசியில் நெல்லை, எலுமிச்சை கிடங்குகள் அமைக்கப்படும்.

*ரூ.3.50 கோடி மதிப்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உலர்களம் அமைக்கப்படும்.

*தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலம்.

*சென்னை கொளத்தூரில் விளை பொருட்களுக்கும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்குமான நவீன விற்பனை மையம்

*விளை பொருட்களுக்கு உரிய விலை பெற மின்னணு ஏலத்திற்கு சிறப்பு மென்பொருள்

*சந்தை சார்ந்த விவசாயம் திட்டத்தின் மூலம் வேளாண் பொருட்களுக்கு உரிய விலை உறுதி செய்யப்படும்

*உணவுப் பதப்படுத்துதலுக்கு என தனி அமைப்பு நடப்பாண்டே துவங்கப்படும்

*திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும்

*20000 ஹெக்டேர் தென்னந்தோப்புகளில் சொட்டுநீர் பாசனமுறை நடப்பாண்டில் ஏற்படுத்த திட்டம்;

*இந்த ஆண்டு 17 லட்சம் தரமான தென்னங்கன்று உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் தரப்படும்

*வட்டார அளவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் ரூ.23 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்.


Tags : Jack Special Center ,Cuddalore ,Panruti ,Refrigerated Warehouses ,Ottan Inn ,Pepper Processing Center ,Kollimalai , வேளாண் பட்ஜெட்
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...