×

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

செங்கல்பட்டு: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 300 பக்க குற்றப்பத்திரிகையை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸ் தாக்கல் செய்தது. முதல் போக்சோ வழக்கில் ஆசிரியைகள் பாரதி, சுஷ்மிதா, தீபா மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 16ல் சிவசங்கர் பாபா கைதான நிலையில் 59 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கலாகி உள்ளது. கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா இதுவரை 3 போக்சோ வழக்கில் கைதாகியுள்ளார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா நடத்திவந்தார். இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.இதுவரை முன்னாள் மாணவிகள் 18 பேர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக புகார் அளித்த நிலையில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்கு உள்ள நிலையில் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது. சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி சிபிசிஐடி விசாரணை நடத்தியது. பள்ளி ஆசிரியைகளை நேரில் வரவழைத்து சிபிசிஐடி விசாரித்தது. முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. பள்ளியில் உள்ள சில ஆசிரியர்கள் சிவசங்கர் பாபாவிடம் தங்களை அழைத்து சென்றதாக புகார் கொடுத்துள்ள மாணவிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

Tags : Shiva Sankar ,Baba , Sivashankar Baba
× RELATED ஸ்ரீ ஸாயி பாபா புராணம்!