மதுராந்தகம்: மதுராந்தகம் அருகேயுள்ள ஸ்ரீ சந்தோஷி கல்லூரியில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா நடந்தது. மதுராந்தகம் அடுத்த பையம்பாடியில் உள்ள ஸ்ரீ சந்தோஷி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று 75 மரக்கன்றுகள் நடும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் முனைவர் அ.சண்முகம் தலைமை தாங்கினார். தனியார் அமைப்பு நிர்வாகிகள் உஷா அஜித் பிரசாத், ஹனி, ஐஸ்வர்யா, நிஷாந்த், கல்லூரி மேலாளர் குருநாதன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் காட்வின், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.