பெரம்பூர்: சென்னை ஐசிஎப் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (44). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். தினமும் மதுஅருந்திவிட்டு வரும் நந்தகுமார், மனைவி மற்றும் மகள்களிடம் தகராறு செய்வாராம். அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால் நந்தகுமாரின் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிடுவாராம். அந்த நேரத்தில் செல்வம், தனது 14 வயது மூத்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது தாயிடம் கூறி மூத்த மகள் அழுதுள்ளாள். இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமாரின் மனைவி தலைமைச்செயலக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார், நந்தகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.