×

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்திருக்கக்கூடியவர்களின் விவரங்களை பெறுவதற்கான சுற்றறிக்கையை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பி வைத்துள்ளார். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்டவற்றிற்கு இந்த சுற்றறிக்கையானது அனுப்பப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் அதாவது 40 கிராம் அளவுக்கு உட்பட்டு நகையை ஈடாக வைத்து கடன் வழங்கப்பட்டு இருப்பது மார்ச் 31, 2021 வரை நிலுவையில் உள்ள விவரங்களை படிவம் எண் கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்களுடைய ஆதார் எண் உள்ளிட்டவற்றின் குடும்ப விவரங்கள் உட்பட தங்கத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த விவரங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு வரும் 16ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள் வாரியான தொகுப்பை அதனுடைய சென்னை மண்டல பதிவாளர் மற்றும் மண்டல இணை பதிவாளர் கையொப்பமிட்டு பதிவாளர் அலுவகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. வங்கி கிளையின் தொகுப்பினை வங்கி மேலாண் இயக்குனர் கையொப்பமிட்டு பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Tags : Jewelry loan
× RELATED தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்களில் 4...