×

கொரோனாவால் உயிரிழந்த 34 குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம்

சென்னை: கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த அரசு மற்றும் தனியார் முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு பிரதான் மந்திரி காரிப் கல்யான் திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சில சுகாதாரப் பணியாளர்கள் மத்திய அரசின் திட்டத்தின் வழிமுறைகளுக்கு உட்படவில்லை. இதையடுத்து தமிழக அரசு சார்பில் அந்த சுகாதாரப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ₹25 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த 43 டாக்டர்களுக்கு ₹25 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் முதற்கட்டமாக கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த 32 டாக்டர்கள் உட்பட 34 சுகாதாரப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Corona, deceased, to 34 families, Rs 25 lakh
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...