×

உளுந்தூர்பேட்டையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 150 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் நேற்றிரவு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூலசமுத்திரம் தக்கா என்ற இடத்தில் உள்ள ஒரு பால் கம்பெனி குடோனில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, அந்த குடோனில் 150 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை பதுக்கி வைத்திருந்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சம்சுதீன், ஜாபர், சாதிக் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Gudon ,Inundurpate , Seizure of 150 ration rice bundles stored at Gudon in Ulundurpet
× RELATED 24,000 வேட்டி சேலைகள் பதுக்கல் அதிமுக...