×

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைய 2 நாட்களே உள்ள நிலையில் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைய 2 நாட்களுக்கு முன்பாகவே மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுளள்து. ஜூலை 19-ம் தேதி மழைக்கால கூட தொடர் தொடங்கியது முதலே பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.


பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.கள் கூறிவந்த நிலையில், அது நாடாளுமன்றத்திக் விவாதிக்கக்கூடிய விஷயம் அல்ல என கூறி அரசு மறுப்பு தெரிவித்து வந்தது. இதனால் மழைக்கால கூட தொடரே முடங்கி போனது. அவை கூடுவதும் காச்சல் குழப்பம் ஏற்பட்டு அவை ஒத்தி வைக்கப்டுவதும் வடிக்கையாக இருந்தது. இந்த அமலுக்கு மத்தியில் பல்வேறு மசோதாக்களை அரசு நிறைவேற்றியது.

குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை முடிவு செய்யும் அதிகாரத்தை மீண்டும் மாநிலங்களுக்கே அளிக்கும் மசோதா மக்களவையில் நிறையவேற்றப்பட்டது. இந்த மசோதா மட்டும் எதிர்க்கட்சிகளின் முழுப்பங்களிப்புடன் நிறைவேறியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 13-ம் தேதியுடன் நிறைவடையும்  நிலையில் தொடர் அமளியால் முன்னதாகவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Lok Sabha ,Parliament , Parliamentary Spring Session, Lok Sabha, Adjournment, Pegasus
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...