×

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வான தஞ்சை மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்குகிறார் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறந்த உள்ளாட்சி நிர்வாகங்களை தேர்வு செய்து முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சிறந்த மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று தஞ்சை மாநகராட்சிக்கு விருதுடன் ரூ.25 லட்சம் பரிசுத் தொகையையும் முதல்வர் வழங்க உள்ளார்.

அதே போன்று, சிறந்த நகராட்சிகளில் முதல் இடத்தை உதகை நகராட்சியும் 2ம் இடத்தை திருச்செங்கோடு நகராட்சியும் 3ம் இடத்தை சின்னமனூர் நகராட்சியும் பெற்றுள்ளன. இந்த நகராட்சிகளுக்கு முறையே ரூ.15 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.சிறந்த பேரூராட்சியாக முதலிடத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கல்லக்குடி பேரூராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.2வது இடத்தில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேல்பட்டம்பாக்கம் பேரூராட்சியும் 3ம் இடத்தை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டையூர் பேரூராட்சியும் பெற்றுள்ளன. இந்த பேரூராட்சிகளுக்கு முறையே ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.

Tags : Thanjai Municipality ,Tamil Nadu ,Stalin , தஞ்சை மாநகராட்சி
× RELATED பாஜகவின் பொய் பிரச்சாரம்...